Read Arabic From tamil

AT-TIBYAN - BY DR. V ABDUL RAHIM

Easy way to Quranic Reading 

பதிப்புரை

திருக்குர்ஆன் ஏக இறைவனின் வாக்காகும். வானத்தையும், பூமியையும் படைத்த அந்த இறைவன்தான் திருக்குர்ஆனை இறக்கியருளியுள்ளான். எதார்த்த நிலையை – பேருண்மைகளை இது எடுத்துரைக்கிறது. எனவே இந்த வான்மறையை ஓதுவது, அதனைக் கற்றுக் கொள்வது, அதன்படி நடப்பது ஆகியவை இன்றியமையாதவையாகும். குர்ஆன் கூறும் உண்மைகளை உணர்ந்து கடைப்பிடித்தால்தான் மனிதனுக்கு இம்மையில் அமைதியும், மறு மையில் வெற்றியும் கிடைக்கும். ஆனால் அந்த நிலைக்கு உயர முதல்படி குர்ஆனை ஓத கற்றுக் கொள்வதும், அதற்கான பயிற்சிகளை மேற் கொள்வதுமே ஆகும்.

இதற்காக, குர்ஆனை எளிதில் ஓதக் கற்றுத் தரும் ‘அத்-திப்யான்’ என்னும் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறோம். குர்ஆன் ஓதிக் கொடுக்கும் ஆசிரியர்கள் இதில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறோம். பிறகு அந்த விதிமுறைகளுக்கேற்ப மாணவர்களுக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்தால், குறுகிய காலத்திற்குள் மாணவர்கள் சரளமாக குர்ஆனை ஓதும் ஆற்றல் பெற்று விடுவார்கள்.

டாக்டர் அப்துர் ரஹீம் அவர்கள் குர்ஆனை கற்றுத் தரும் இந்த எளிய முறையை இயற்றித் தந்துள்ளார்கள். டாக்டர் அவர்கள் பன்மொழி அறிஞர். குறிப்பாக மொழிகள் கற்றுத் தருவதில் சிறப்பாற்றல் பெற்றவர். இப்போது மதீனா பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேசாத மக்களுக்கு அம்மொழியைக் கற்றுத் தரும் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். மொழியில் தொடர்பாக அரிய பல நூல்கள் எழுதி சர்வதேசப்புகழ் பெற்றுள்ளார்.

டாக்டர் அவர்களுக்கும், இந்த நூலை வெளியிடத் துணைபுரிந்த அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தானது. அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் அழகிய கூலியை வழங்குவானாக! ஆமீன்!

இந்த நூல் தமிழ் உச்சரிப்பை கருத்தில் கொண்டு இயற்றப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு தமிழ் பேசும் மக்கள் பெரும் பலன் அடைவார்கள் என்று நம்புகின்றோம். இதனைப் பயன்படுத்துவோர் இந்நூலின் எளி மையை அனுபவப்பூர்வமாய்க் காண்பார்கள். வாசகர்கள் இந்நூலைத் தாமும் வாங்கிப் படிப்பதுடன் – நண்பர்களுக்கும், இதர கல்வி நிறுவனங்களுக்கும் இந்நூலை அறிமுகப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந் நூலைப் பரவலாக்கிட எல்லாவகையான ஒத்துழைப்புகளையும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஆறாம் பதிப்பின் பதிப்புரை

இறை அருளால் இந்நூலின் ஆறாம் பதிப்பை, சென்ற ஐந்து பதிப்புகளை விட புதிய வடிவில் அமைத்துள்ளோம். புத்தகத்தின் அளவை சற்று பெரிதாக்கி உள்ளோம். அரபி எழுத்துக்களை கணிப்பொறியின் வாயிலாக துல்லியமாக ஒரே வடிவத்தில் தந்துள்ளோம். அரபி எழுத்துக்களின் உச்சரிப்புகளைக் கற்றுத் தரும் வரைபடங்களை அந்த அந்தப் பாடத்தின் தொடக்கத்திலேயே இடம்பெறச் செய்துள்ளோம்.

குர்ஆனை கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் இந்த நூலின் புதிய அமைப்பு, முந்தைய பதிப்புகளை விட அதிகம் வசதியாகவும், எளிமையாகவும், இசைவாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் திருமறையைப் பரவலாக்கும் தொண்டில் இன்னும் அதிகமாக உழைக்கும் ஆற்றலை அருள் வானாக!

தேதி: 15.6.1997

சென்னை 12.

M.A. ஜமீல் அஹ்மத்,

பொதுச் செயலாளர்.

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்

13 - ஆம் பதிப்பு குறித்து...

       எல்லாப் புகழும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! இறையருளால் ‘அத்-திப்யான்’ 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியானது. பின்னர் குர்ஆன் கற்பவரின் வசதிக்காக அந்நூலின் பெரும்பாலான அரபி எழுத்துகளைக் கணினி வாயிலாக ஒரே சீரான வடிவத்தில் அமைத்து 1997 ஆம் ஆண்டு மறுபதிப்பு வெளியிட்டோம். வல்ல இறைவனின் வற்றாத கருணையால் இதுவரை 12 பதிப்புகள் வெளிவந்து, ஆயிரக்கணக்கான மக்கள் அல்லாஹ்வின் இறுதி வேதம் திருக்குர்ஆனைத் தடையின்றி எளிதில் ஒதக் கற்றுக் கொண்டனர்.
      சென்ற பதிப்புகளில் நூலின் சில பகுதிகளில் உள்ள அரபி எழுத்துகள் கணினி மயம் ஆக்கப்படாமல் இருந்தன. இந்தப் புதிய பதிப்பில் அந்தப் பக்கங்களையும் கணினி வாயிலாக சீராக வடிவமைத்துள்ளோம். அதாவது, இப்பொழுது முழு நூலும் கணினி வாயிலாக சீரமைக்கப்பட்டு, கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உங்கள் கைகளில் தவழ்கிறது…! இந்தப் புதிய அமைப்பு குர்ஆனை எளிதில் ஓதிட விரும்பும் மக்களுக்குத் துணை புரியும் என்பது திண்ணம்…!
   வல்ல இறைவன் இந்தப் புதிய பதிப்பை முந்தைய பதிப்புகளை விட அதிகம் பயனுள்ளதாகவும், இதன் மூலம் குர்ஆனுடைய மொழியை எளிதில் கற்றுக் கொள்ளவும் அருள் புரிவானாக!
எண்ணங்கள் ஈடேற இறையருள் துணை நிற்கட்டும்!
15.06.2006
சென்னை – 12
ஹெச். அப்துர் ரகீப்
தலைவர் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்

முன்னுரை

   மொழியைக் கற்றுத் தருவதற்கு தவீன காலத்தில் பின்வரும் வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது: ஒரு மாணவனின் தாய்மொழியிலும். அவனுக்குக் கற்றுத்தர வேண்டிய மொழியிலும் உள்ள எழுத்துகள் – அவற்றின் உச்சரிப்பின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
   1. இரு மொழிகளிலும் உள்ள ஒரே விதமான உச்சரிப்பு கொண்ட எழுத்துகள்.
   2. இரு மொழிகளிலும் பெருமளவுக்கு ஒரேவிதமான உச்சரிப்பு கொண்ட எழுத்துகள் இருந்த போதிலும், சற்று
மாறிய உச்சரிப்பு உள்ள எழுத்துகள்.
    3. முற்றிலும் மாறுபட்ட உச்சரிப்பு கொண்ட எழுத்துகள்.
     இரு மொழிகளின் எழுத்துகளிலுள்ள இந்தத் தன்மைகளை உன்னிப்பாகக் கவனித்து, இந்த அடிப்படையிலேயே அவற்றைச் சொல்லிக் கொடுத்தால் அடுத்த மொழியைக் கற்றுக் கொள்வது எளிதாகி விடுகிறது.
இந்நூலில், மேற்சொன்ன அடிப்படையைக் கையாண்டு தமிழ்பேசும் மாணவனுக்கு அரபு மொழியில் உள்ள எழுத்துகளை எளிதில் புரியவைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் பாடங்கள், குர்ஆனில் உள்ள வார்த்தைகளைக் கொண்டே விளக்கப்படுகின்றன. குர்ஆனை விரைவாகக் கற்றுக் கொள்ள இது மிகவும் துணை புரிகிறது. இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைக் கொண்டு தமிழ் மாணவன் குறுகிய காலத்தில் குர்ஆனை ஒத கற்றுக் கொள்ளலாம்.
  ஆசிரியர்களும், மொழியியல் அறிஞர்களும் இந்நூலைப் பார்வையிட்டு தங்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நூல் இன்னும் சிறப்பாக அமைய அவர்கள் வழங்கும் கருத்துகளும், ஆலோசனைகளும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும். அல்லாஹ் நாடினால், அடுத்த பதிப்பில் அவற்றை கவனத்தில் கொண்டு இந்த நூல் இன்னும் அதிகப் பயனுள்ளதாக அமைக்கப்படும்.
      வல்ல இறைவன் அருளியுள்ள வழிகாட்டுதல் அனைத்திற்காகவும் நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும் இந்நூல், இறுதி மறையான அல்குர்ஆனை ஓத முற்படும் மாணவர்களுக்கு அதிகப் பயனுடையதாய்த் திகழச் செய்ய வேண்டும் என அந்த ஏக இறைவனை இறைஞ்சுகின்றேன்.

 V. அப்துர் ரஹீம்

ஆசிரியர்களுக்கு...

  ஒரு மொழியைக் கற்றுத்தரும் நூல் எவ்வளவு சிறந்த முறையில் அமைக்கப் பெற்றாலும், ஆசிரியரின் துணையின்றி அந்நூலில் இருந்து தேவையான பயனை அடைய முடி யாது. எனவே இந்தத் துறையில் ஆசிரியர்களின் மனமார்ந்த ஒத்துழைப்பினைக் கோருகின்றோம்.

1. தொகுப்பாசிரியர் கூறியுள்ளபடி, அரபி மொழியிலும், தமிழ் மொழியிலும் பொதுவாய் அமைந்துள்ள எழுத்துக்களின் ஒலி வடிவம் முதலில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவற்றைக் கற்றுத் தருவதில் சிரமம் இருக்காது. ஆயினும் கடைசிப் பக்கங்களிலுள்ள பாடங்களையும், உச்சரிக்கும் முறைகளையும் ஆசிரியர் நன்கு பார்த்துக் கொள்வதுடன் அவற்றுக்கேற்பவே அதனைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

2. அடுத்து, தமிழ் மொழியிலுள்ள எழுத் துக்களுக்கு சற்று மாற்றமான ஒலி வடிவம் கொண்ட எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களின் சரியான ஒலி வடிவத்தை முதலில் ஆசிரியர் ஒலித்துக் காட்டவேண்டும். பிறகு மாணவர்கள் அதைப் புரிந்து கொண்டார்களா என்பதைச் சோதிக்க அவர்களை ஓதச் செய்ய வேண்டும். அதில் குறை இருந்தால், அதனை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.

3. எழுத்துக்களின் முழுமையான வரி வடிவமும், அவை பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும்போது உருவாகும் அரை வடிவமும் ஒவ்வொரு பாடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மாணவர்களுக்கு நன்கு விளக்க வேண்டும். அந்தந்தப் பாடத்துக்கான படத்தையும் கவனிக்கும்படி மாணவர்களிடம் சொல்ல வேண்டும்.

4. ஆசிரியர் ஓதுவதை மாணவர் கவனத்துடன் கேட்டும், தாமாக புத்தகத்திலிருந்து அதனைப் படித்தும் பார்க்க வேண்டும். பின்னர் அட்டவணை(Chart)யில் அல்லது கரும்பலகை யில் எழுதிக் காண்பிக்கப்படும் எழுத்துக்களை மாணவர்கள் படிக்க வேண்டும். அத்துடன் முடிந்தால் ஒலி நாடா, ஒளிப்பேழை ஆகியவற்றின் துணை கொண்டும் எழுத்துக்களின் துல்லியமான உச்சரிப்புகளை கற்றுத்தர வேண்டும். இவ்வாறு அனைத்துக் கோணங்களிலிருந்தும் மாணவர்கள் அந்தப் பாடத்தை புரிந்து கொண்டார்களா என்று ஆசிரியர் கவனிக்க வேண்டும்.

5. பாடங்களை எழுதும்படி ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். முத லில் எழுத்து ஒழுங்காக வரவில்லை என்றால் அதனை அழிக்காமல், அதன் பக்கத்திலேயே மீண்டும் எழுதச் சொல்ல வேண்டும். இம் முறையால் அதன் சரியான வடிவம் மாணவ உள்ளத்தில் நன்கு படித்து விடும். சீக்கிரம் அவர் சீக்கிரம் அவர் எழுதவும் தெரிந்து கொள்வார்.

6. அவ்வப்போது ஓரிரு வார்த்தைகளை டிக்டேஷன் (Dictation) முறையிலும் எழுதப் பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறாக, மாணவர் ஒரு பாடத்தை நன்கு புரிந்து கொண்டாரா என்பதை உறுதி செய்த பிறகுதான் அடுத்த பாடத்திற்கு போகவேண்டும். முடிந்தால் பயிற்சிகளில் உள்ள அதே வரம்புக்கு உட்பட்ட வேறு பல சொற்களை கரும்பலகையில் எழுதி மாணவர்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

7, ஆசிரியர் பாடத்திலுள்ள எழுத்தின் பெயர்களை ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, பாடம் 1-இல் உள்ளபடி ‘ம,மி,மு’ என்று சொன்னாலே போதும். இந்த எழுத்தின் பெயர் ‘மீம்’ என்று சொல்ல வேண்டியதில்லை. அதே போன்று வார்த்தைகளை எழுத்துக்கூட்டிச் (Spelling) சொல்லித்தர வேண்டியதில்லை. அவர்களா கவே எழுத்தைச் சரியாக இணைத்துப் படிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

     அதைப்போல் எந்த எழுத்துக்களின் பெயர் களையும் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. இந்த நூலின் இறுதியில் இதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. மாணவர் நன்கு ஓதப் பழக்கப்பட்ட பிறகு எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளின் பெயர்களை கடைசிப் பாடங்களில் தாமாகவே அவர் எளிதில் தெரிந்து கொள்வார். தேவைப் பட்டால் அந்தக் கட்டத்தில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கலாம்.

8. பாடங்கள் நடத்தும்போது மாணவர்கள் கேட்பவராக மட்டும் இல்லாமல் அதில் பங்கு கொள்பவராகவும் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘ம’-வை மாணவர்கள் அமர்ந்து இருக்கும் நிலையிலும், ‘மா’-வை எழுந்து நிற்கும் நிலையிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும். ‘மா-ர்-‘வை இரண்டு மாத்திரை அளவுக்கு நீட்டி ‘மா…ர்’ என்று ஒலிக்கும் போது வலது கையை உயர்த்தச் சொல்ல வேண்டும். அல்லது ன,னி உச்சரிப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘ன’ எனும்போது கையை மேலே உயர்த்தச் சொல்லியும், ‘னி’ எனும்போது கையை தாழ்த் திக் கொள்ளச் சொல்லியும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறாக மாண வர்களை – பலமுறைகளைக் கொண்டு பாடத்தில் பங்கு கொள்ளச் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-பதிப்பாசிரியர்